தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை -துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, கொண்டம்பட்டி ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்ச்சி கூடத்தையும் அவர் தொடங்கி வைத்து உடற்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தைப் பெறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், மக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும், வெளியில் சென்று வரும்போது கை மற்றும்
கால்கள் அனைத்தும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version