சீனாவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 3,070 ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 28 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் நேற்று கொரோனா வைரசுக்கு 28 பேர் பலியாகினர். இதனால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 70 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மூவாயிரத்து 500 பேர் பலியாகி உள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தென் கொரியாவில் மேலும் 174 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version