இந்தியாவில் கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

புதிதாக 4 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 3ஆயிரத்து 980 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோன தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால், தொற்றிலிருந்து மீண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போது வரை 16 கோடியே 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Exit mobile version