இந்தியாவில் 12,380 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மட்டும் 9 பேர் பலியான நிலையில், 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 916ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 578ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 242ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் ஆயிரத்து 23 பேரும், மத்தியபிரதேசத்தில் 987 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 766 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 735 பேருக்கும், தெலங்கானாவில் 647 பேருக்கும் என இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version