கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கொரோனா நோய்தொற்று தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இராசாமணி, கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷரவன் குமார் ஆகியோருடன் அமைச்சர் வேலுமணி கலந்தாலோசித்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட அம்மா உணவகங்களில் கடந்த 2 மாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச உணவுக்கான தொகையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். செலவுத் தொகை 86 லட்சத்து 19 ஆயிரம் லட்சம் ரூபாயை அஇஅதிமுக சார்பில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Exit mobile version