கொரோனா தடுப்பு நடவடிக்கை : 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் பொது இடங்களில் வரும் 31ம் தேதி வரை, 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிந்த வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், அவசியமின்றி வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை போராட்டம், தர்ணா என்ற பெயரில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் எனவும், பொது இடங்களிலும் ஐந்து பேருக்கும் மேல் கூடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து, மெட்ரோ ரயில்கள், கார்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும், மேற்கண்ட உத்தரவுகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version