கொரோனா பீதி: ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவு

கொரோனா அச்சம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 30 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டுள்ளன. இதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரி, உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகளை வரும் 30 ஆம் தேதி வரை மூட அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இன்னிசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என அனைத்து கலைநிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு வெளிநாட்டினர் உள்பட 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version