சென்னையில் கொரோனாவால் பாதிப்பு நிலவரம்!!

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்து 93 பேரும், கோடம்பாக்கத்தில் 2ஆயிரத்து 29 பேரும், தேனாம்பேட்டையில் 2 ஆயிரத்து 14 பேரும், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 798 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகரில் ஆயிரத்து 525 பேரும், அடையாறில் ஆயிரத்து 7 பேரும், வளசரவாக்கத்தில் 939 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் 651 பேருக்கும், திருவொற்றியூரில் 610 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version