அனைவரும் வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மருத்துவமனையாக அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை கொரோனா பாதிப்பு இல்லாத மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் வரை 39 பேர் பூரண குணமடைந்து சென்றுள்ள நிலையில் இன்று ஒரு குழந்தை, மூன்று பெண்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் பொன்னேரி அரசு மருத்துவமனை கொரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனை இரண்டு நாட்களுக்கு மூடப்படுமெனவும், அதன் பிறகு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சீரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version