இந்தியாவில் 78,003 பேருக்கு கொரோனா பாதிப்பு!

ந்தியாவில் 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 134 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 975 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 9 ஆயிரத்து 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
டெல்லியில் 7 ஆயிரத்து 998 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் 4 ஆயிரத்து 328 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4 ஆயிரத்து 173 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 729 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் 26 ஆயிரத்து 235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Exit mobile version