அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்தில் இருந்து திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்கா மற்றும் சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். போரூரைச் சேர்ந்த 74 வயது முதியவர், புரசைவாக்கத்தைச் சேர்ந்த 52 வயது பெண்மணி ஆகியோர் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, கீழ்க்கட்டளையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் சுவிட்ஷர்லாந்தில் இருந்து திரும்பிய நிலையில், அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version