புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் புதியதாக 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிதாக தொற்று ஏற்பட்டவர்கள் உட்பட, 27 பேர் புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாஹேவில் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 5 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவர் இதயநோயாளி என்றும், மற்றொருவர் டயலிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version