டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 18 பேருக்கு கொரோனா தொற்று!

டெல்லி மாநாட்டில் பங்கேற்று நாமக்கல் திரும்பிய 18 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். இதில், மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, டெல்லி மாநாட்டில் பங்கேற்று நாமக்கல் திரும்பிய 18 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவர்களுக்கு நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். அரசு மருத்துவமனைகளை அடுத்து தனியார் மருத்துவமனைகளிலும் ஆயிரத்து 850 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

Exit mobile version