சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சென்னையில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டிய நிலையில், மண்டல வாரியாக பாதிப்பை தற்போது காணலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 859ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்து 835 பேரும், தேனாம்பேட்டையில் 2 ஆயிரத்து 518 பேரும், கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 431 பேரும், திரு.வி.க. நகரில் 2 ஆயிரத்து 167 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகரில் ஆயிரத்து 974 பேரும், அடையாறில் ஆயிரத்து 274 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 54 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் 813 பேருக்கும், அம்பத்தூரில் 807 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version