திருவாரூர் மாவட்டத்தில் தற்போது யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை!!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளதால், அந்த மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்திற்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாலும், சுகாதாரப் பணியாளர்களின் கடும் உழைப்பினாலும், திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வந்தனர். கடந்த வாரம் வரை 29 பேர் குணமடைந்திருந்த நிலையில், மீதமிருந்த மூன்று பேரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து திருவாரூர் மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு ஒரு சில தினங்களில் மாறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version