தமிழகத்தில் இதுவரை 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நாட்கள் வாரியாக எவ்வளவு உயர்ந்தது என்பதை தற்போது பார்க்கலாம். தமிழகத்தில், கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் மிகக் குறைந்த அளவே இருந்த நிலையில், தற்போது 690 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாடு சென்றுவிட்டு திரும்பிய வர்களுக்கு அதிகபாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த 31ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயரத்தொடங்கியது, கடந்த மாதம் 31ம் தேதி 51 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கடந்த 1 ஆம் தேதி 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து 2 ஆம் தேதி 75 பேருக்கும், 3 ஆம் தேதி 102 பேருக்கும், 4ம் தேதி 74 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. 5 ஆம் தேதி 86 பேருக்கு உறுதியான நிலையில், கடந்த 6ஆம் தேதி 50 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டது.  புதிதாக 69 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version