இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 மாதங்களுக்கு பிறகு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 17 லட்சத்து 87 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் 251 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 692 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3 லட்சத்து 95 ஆயிரத்து 192 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 31 ஆயிரத்து 650 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 5 கோடியே 31 லட்சத்து 45 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version