கொரோனா வைரஸ் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, சென்னை விமான நிலையம் முழுவதும், மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை டாக்டர் எம்ஜிஆர் ஜானகி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்பர்ஷ் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்துக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version