சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் 81 பேர் பலி

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, நேற்று ஒரேநாளில் 81 பேர் பலியானதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் சீன சுகாதாரத்துறை திணறி வருகிறது. உலகம் முழுவதும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. இந்த நிலையில், சீனாவில், மேலும் 2 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 100 ஆக உயர்ந்தது. மேலும், சீனவில் நேற்று ஒரே நாளில், 81 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று, ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஏற்கெனவே தலா ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version