கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலால், சர்வதேச அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை இன்று காலை கடும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் ஆயிரத்து 417 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து 159 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 391 புள்ளிகள் குறைந்து, பத்தாயிரத்து 599 புள்ளிகளாக உள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்கு சந்தை வீழ்ச்சியடைந்ததால், முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Exit mobile version