கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 908 பேர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உருவெடுத்தது. இதையடுத்து 25 நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ள நிலையில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 97 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version