அமெரிக்காவில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக இதுவரை 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version