தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் ஒருவர் உள்பட 34 ஆயிரத்து 867 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து ஆயிரத்து 580 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 421 பேர் ஆண்கள் என்றும், 15 ஆயிரத்து 446 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 4 ஆயிரத்து 985 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 882‬ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் 4 ஆயிரத்து 227 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 899 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 808 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஈரோட்டில் ஆயிரத்து 467 பேரும், மதுரையில் ஆயிரத்து 453 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.27 ஆயிரத்து 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 404 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Exit mobile version