புதிய உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 83 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரசால் இதுவரை 39 லட்சத்து 36 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் ஒரே நாளில் ஆயிரத்து 96 பேர் உயிரிழந்த நிலையில், நோய் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 லட்சத்து 43 ஆயிரத்து 844 பேரும், ஆந்திராவில் 4 லட்சத்து 65 ஆயிரத்து 730 பேரும், தமிழ்நாட்டில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 101 பேருக்கும், டெல்லியில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 306 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கம், பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

Exit mobile version