மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரித்துள்ள அவர், காணொலி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென என அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version