News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கொரோனா அச்சுறுத்தல்: கிளப்புகள், பார்கள் உள்ளிட்டவைகளை மூட தமிழக அரசு உத்தரவு

Web Team by Web Team
March 16, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
கொரோனா அச்சுறுத்தல்: கிளப்புகள், பார்கள் உள்ளிட்டவைகளை மூட தமிழக அரசு உத்தரவு
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை வரும் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக 104, 044 – 2951 0400, 87544 48477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடதவாறு கண்காணிக்க வேண்டும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள் நடத்த மார்ச் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக் கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 31 ஆம் தேதி வரை புதிய நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதை திருமண மண்டப உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பிற வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்பினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: எடப்பாடி பழனிசாமிகொரோனாகொரோனா பாதிப்புகொரோனா வைரஸ்தமிழக அரசுதமிழக முதலமைச்சர்
Previous Post

கொரோனா பற்றி அறிந்து கொள்ள தனி இணையதளம் உருவாக்கிய கூகுள்

Next Post

சட்டப்பேரவையில் மீன்வளம், பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

Related Posts

குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?
TopNews

குழந்தைகளுக்கு தொற்று அதிகரிப்பு… மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா?

July 16, 2021
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது
TopNews

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது

July 15, 2021
இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?
TopNews

இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?

July 12, 2021
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குக:  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை
TopNews

முறையாக இறப்புச் சான்றிதழ் வழங்குக: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிக்கை

July 2, 2021
Next Post
சட்டப்பேரவையில் மீன்வளம், பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

சட்டப்பேரவையில் மீன்வளம், பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version