கொரோனா அச்சுறுத்தல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் தொடர் இந்தாண்டு நடத்தப்படுமா என பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வெளிநாட்டு விசாக்களையும் ஏப்ரல் 15ம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெறாது என்றும், தற்போதைய நிலையே தொடரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version