கேரளாவில் இருந்து வந்த முருகன் என்பவருக்கு கொரோனா அறிகுறி

நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் கேரளாவில் இருந்து வந்த முருகன் என்பவர் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் நோய் தொற்று இருக்கலாம் என்ற கோணத்தில் இருவரின் இரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்கள் உள்பட திரையரங்கம், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் தலைமை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் கேரளாவில் இருந்து வந்த முருகன் என்பவர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் வந்த அவரது மனைவிக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவருக்கும் இரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கோள்ளப்பட உள்ளது.

Exit mobile version