உலகை நடுங்க வைக்கும் கொரோனா!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 18 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரே நாளில் ஆயிரத்து 8 பேர் உயிரிழந்தனர்.  ஸ்பெயினில் 2 லட்சத்து 68 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் பேரும், ரஷ்யாவில், இரண்டு லட்சத்து 21 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 19 ஆயிரம் பேரும், பிரான்சில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று ஜெர்மனி, பிரேஸில், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. 

Exit mobile version