கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்!!!

கோவை சுகுணாபுரம் பகுதியிலுள்ள சேக்கினா ஐபிஏ ஆலயத்தில் கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிவாரண பொருட்களை வழங்கினார். கோவை தொண்டாமுத்தூர், வேடபட்டி, மாதம்பட்டி வடவள்ளி, மருதமலை, இடையர்பாளையம், வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத போதகர்கள் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version