கொரோனா நிவாரண நிதிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி நிதி -அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

பள்ளிக்கல்வித்துறை சார்பில், கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 70 கோடி ரூபாய் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியினை வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து, தொழிலதிபர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களால் இயன்ற நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நிவாரணத்திற்காக, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 70 கோடி ரூபாய் வழங்கப்படும் என என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம், கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Exit mobile version