ஆக்ஸிஜன் குழாயை அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக புகார்

கொரோனா தொற்று பாதிப்பால், கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட திட்டக்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா, மார்ச் 20ஆம் தேதி உயிரிழந்தார். தனது கணவருக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயை மருத்துவர் ஒருவர் அகற்றியதே உயிரிழப்புக்கு காரணம் எனவும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜாவின் மனைவி கயல்விழி கதறி அழுது கண்ணீர்விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், இதுகுறித்து நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version