தமிழகத்தில் மேலும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் மேலும் ஐந்தாயிரத்து 864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் ஐந்தாயிரத்து 864 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

அதில் மூவாயிரத்து 560 பேர் ஆண்கள் என்றும், இரண்டாயிரத்து 304 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 175 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 98 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவில் அதிகரித்து வருகிறது.

அதன்படி, திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 277 பேரும், ராணிப்பேட்டையில் 272 பேரும், கன்னியாகுமரியில் 248 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஐந்தாயிரத்து 295 பேர் குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 74 புள்ளி 24 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 57 ஆயிரத்து 962 பேர் உள்ள நிலையில், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 838 ஆக இருக்கிறது.

Exit mobile version