இந்தியாவில் 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 36 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 530 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 49ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 39 ஆயிரத்து 157 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 3 கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 80 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 3 லட்சத்து 64 ஆயிரத்து 129 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 149 நாட்களில் மிகக் குறைவு என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version