இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா தொற்று

இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா காரணமாக தினசரி பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 ஆயிரத்து 379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தினசரி தொற்று பாதிப்பு 3 புள்ளி 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 124 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 17ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் குணமடைந்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட சிறார்கள் உள்பட 99 லட்சத்து 27 ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றும் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 192 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு ஆயிரத்து 892ஆக அதிகரித்துள்ளது.

ஒமிக்ரானில் இருந்து இதுவரை 766 பேர் குணமடைந்தனர்.

Exit mobile version