தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6 ,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் 6 ,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 65 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறியப்பட்ட 6 ஆயிரத்து 785 பேரில், 4 ஆயிரத்து 137 பேர் ஆண்கள் என்றும், 2 ஆயிரத்து 648 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னையை பொறுத்த வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 206ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரே நாளில் 6 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 71ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, விருதுநகரில் 424 பேரும், செங்கல்பட்டில் 419 பேரும், திருவள்ளூரில் 378 பேரும், காஞ்சிபுரத்தில் 349 பேரும், தூத்துக்குடியில் 308 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக மேலும், 88 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 320 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version