இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது !!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 லட்சத்து 94 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 990 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், 94 ஆயிரத்து 695 பேரும், குஜராத்தில் 34 ஆயிரத்து 600 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 25 ஆயிரத்து 797 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 20 ஆயிரத்து 488 பேரும், தெலங்கானாவில் 20 ஆயிரத்து 462 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version