இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 58 ஆயிரத்து 952 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 93 ஆயிரத்து 528 பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் 1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 11 கோடியே 72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version