இந்தியாவில் வரலாறு காணாத பாதிப்பு – அச்சுறுத்தும் கொரோனா!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 75 ஆயிரத்து 86 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் நோய் தொற்றால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், சுமார் 11 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும்,10 கோடியே 45 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version