தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 4 ஆயிரத்து 231 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 544 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 687 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 994 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 652 ஆக உள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 364 பேரும், விருதுநகரில் 289 பேரும், மதுரையில் 262 பேரும், கள்ளக்குறிச்சியில் 254 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 61 புள்ளி 75 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரேநாளில் 65 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 765ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version