News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

Web Team by Web Team
July 15, 2020
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
Share on FacebookShare on Twitter

சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா தடுப்பு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளை கண்டுபிடிப்பதற்காக 12 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியாற்றுவதாகவும், நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த மே 8ம் தேதி முதல், ஜூலை 14ம் தேதி வரை சென்னையின் 15 மண்டலங்களில் 17 ஆயிரத்து 134 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதில், 10 லட்சத்து 65 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். கொரோனா அறிகுறியுடன் இருந்த 50 ஆயிரத்து 599 பேருக்கு பரிசோதனை நடத்தி, 12 ஆயிரத்து 237 பேருக்கு தொற்று கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். சென்னையில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாக சென்னையில் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னையில் சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 என்ற நிலையில் குறைந்துள்ளதுடன், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதேபோன்று பிற மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் அவரவர் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து, கேட்டறிந்தார். சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் தற்போதைய குடிநீர் நிலவரம் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார். கூட்டுக் குடிநீர் திட்டங்களில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கும் போதுமான அளவில் குடிநீர் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags: chennai corporationcoronaMinister S.P.Velumaninewsj
Previous Post

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்பு!

Next Post

இந்தியாவில் ஒரேநாளில் 29,429 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
இந்தியாவில் ஒரேநாளில் 29,429 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரேநாளில் 29,429 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version