கொரோனாவுக்கு புதுச்சேரி மாநிலத்தில் முதல் உயிர்பலி நிகழ்ந்தது

புதுச்சேரி மாநிலம் மாஹேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் முதல் உயிர் பலி நிகழ்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் மாஹேவைச் சேர்ந்த 71 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கன்னூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் முதல் கொரோனா உயிர் பலி நிகழ்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version