இங்கிலாந்தில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா!

இங்கிலாந்தில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது…

கொரோன வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் கடந்த 6 -ம் தேதி இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த 19 பேர் அடங்கிய குழு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் அந்த 19 பயணிகளில் ஒருவருக்கு கடந்த 10 -ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மூணாறு டாட்டா பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிப்பிற்குள்ளான நபருக்கு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தங்கியிருந்த நபர்கள் மருத்துவத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version