தமிழகத்தில் புதிதாக இன்று 5,875 பேருக்கு கொரோனா!!

தமிழகத்தில் மேலும் ஐந்தாயிரத்து 875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஐந்தாயிரத்து 875 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

மூவாயிரத்து 489 ஆண்களுக்கும், இரண்டாயிரத்து 386 பெண்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 65 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து ஆயிரத்து 951 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவில் அதிகரித்து வருகிறது.

அதன்படி, தூத்துக்குடியில் 271 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும், திருவள்ளூரில் 317 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஐந்தாயிரத்து 517 பேர் குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 76 புள்ளி 27 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 56 ஆயிரத்து 998 பேர் உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை நான்காயிரத்து 132 ஆக இருக்கிறது.

Exit mobile version