கொரோனா அச்சம்: பிளாஸ்டிக் பையில் புகுந்து கொண்ட விமானப் பயணிகள்

கொரோனா அச்சம் உலகெங்கும் உள்ள மக்களை அட்டிப்படைத்துவரும் சூழலில், கொரோனாவில் இருந்து தப்பிக்க விமானப் பயணிகள் சிலர் பிளாஸ்டிக் பைகளுக்குள் புகுந்து கொண்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்சுக்கு, உலகெங்கும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எந்த பாதுகாப்பு முறைகளும், மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில், கொரோனா அச்சம் மக்களை ஆட்டிப்படைக்கின்றது.
 
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் விமானப் பயணிகள் சிலர் கொரோனா அச்சம் காரணமாக தங்களை பிளாஸ்டிக் பைகளில் முழுவதுமாக சுற்றிக் கொண்டுள்ள காட்சி கடந்த வாரம் வெளியானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
 
இதற்கு முன்பு, கொரோனா அச்சம் காரணமாக ஓட்டுநர் ஒருவர் 12 பாதுகாப்பு முகமூடிகளை அணிந்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது, அதற்குப் பிறகு இந்த வீடியோவும் வைரலாகி வருகின்றது.
 
மேம்போக்காகப் பார்க்கும் போது, கேலிக்கு உரிய சம்பவமாக இது தோன்றினாலும், கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் எந்த மாதிரியான மனநிலையிலும் அச்சத்திலும் உள்ளனர் என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்துகின்றது.

Exit mobile version