இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 40 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்து 254ஆக உயர்ந்துள்ளது. 42 ஆயிரத்து 295 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 3 லட்சத்து 85ஆயிரத்து 227 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 52 கோடியே 95 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Exit mobile version