கொரோனா எதிரொலி : மலர் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம்!

கொரோனா வைரஸ் எதிரொலியாக சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் தடைப்பட்டதால் மலர்கள் ஏற்றுமதியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக ஒசூர் வீதிகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மலர் வியாபரிகள் மற்றும் மலர் உற்பத்தி செய்த விவசாயிகள் அதிக அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். கேரள மாநிலத்திற்கு ஒசூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மலர்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது உள்ளூர் சந்தைகளில் கூட மலர்கள் வியாபாரம் ஆகுவதில்லை.. இதனால் மலர் வியாபாரத்தை நம்பி முதலீடு செய்த விவசாயிகள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version