கொரோனா எதிரொலி – சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சி.பி.எஸ்.இ தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்றவை மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் ஆகியவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், இன்று முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருந்த, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த ஜே.இ.இ மெயின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Exit mobile version