திருவள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பாபுவின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த ஊரார்

திருவள்ளூர் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய ஊழியர்கள் யாரும் முன்வராத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தனது நண்பர்களோடு இணைந்து உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்காக திருவேங்கடபுரம் இடுகாட்டில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் என்பதால் அந்த பெண்ணின் சடலத்தை தொடுவதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டினர்.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் அவரது நண்பர்கள் சிலர் இணைந்து பாதுகாப்பு கவச உடையை அணிந்து இறந்த பெண்ணிற்கு இறுதி சடங்கு செய்தனர்.

ஆம்புலன்ஸில் இருந்த பெண்ணின் உடலை எடுத்து கயிறு மூலமாக குழியில் இறக்கி நல்லடக்கம் செய்தனர்.

மனிதம் மலரும் வகையில் அவர்கள் செய்த இச்செயல் வலைதள வாசிகளிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது

Exit mobile version