தமிழ்நாட்டில் புதிய உச்சத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, 30 ஆயிரத்து 621 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 13 பேர் உள்பட 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 772 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 532 பேர் ஆண்கள் என்றும், 13 ஆயிரத்து 83 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 6 ஆயிரத்து 991 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் 2 ஆயிரத்து 835 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 173 பேரும், மதுரையில் ஆயிரத்து 331 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் ஆயிரத்து 251 பேரும், கன்னியாகுமரியில் ஆயிரத்து 79 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆயிரத்து 508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 293 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்

Exit mobile version